| ADDED : மே 11, 2024 09:45 PM
திருவள்ளூர்:திருவள்ளூர் ஸ்ரீ நிகேதன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், 10ம் வகுப்பு அரசு பொது தேர்வு எழுதிய, 227 மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவியர் ரஞ்சனி, சவிதா மாணவர் தியாகராஜ் ஆகியோர், 496 மதிப்பெண் பெற்று முதலிடம் பெற்றுள்ளனர்.மாணவி ஹர்ஷினி, ரச்சனா மற்றும் மாணவர் கனியமுதன் ஆகியோர் முறையே முதல் இரண்டு மற்றும் 3ம் இடம் பிடித்தனர். மேலும், ஜெ.இ.இ., தேர்வுக்கு இவர்கள்தேர்ச்சி பெற்றனர். சாதனை மாணவர்களை தாளாளர் விஷ்ணு சரண், பள்ளி முதல்வர் ஸ்டெல்லா ஜோசப், துணை முதல்வர் கவிதா, தலைமை ஆசிரியர் ஷாலினி ஆகியோர் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.