மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி
திருத்தணி:திருத்தணி ஒன்றியம், தாடூர் ஊராட்சிக்குட்பட்ட எல்.என்.கண்டிகை கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இங்கு, 90க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இப்பள்ளி சார்பில் நேற்று வரும் கல்வியாண்டில் தங்களது குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்க்க வேண்டும் என விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இதில் பள்ளி மாணவ- மாணவியர், 30க்கும் மேற்பட்டோர் குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்க்க வேண்டும், அரசு சார்பில் மாணவர்களுக்கு வழங்கப்படும் பல்வேறு நலதிட்ட உதவிகள் குறித்து மாணவர்கள் எல்.என்.கண்டிகை, இ.என்.கண்டிகை மற்றும் தாடூர் ஆகிய கிராமங்களில் ஊர்வலமாக சென்று பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.