உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / மாநில மின்னொளி கூடைப்பந்து ரைசிங் ஸ்டார் அணி அபாரம்

மாநில மின்னொளி கூடைப்பந்து ரைசிங் ஸ்டார் அணி அபாரம்

சென்னை: மாநில கூடைப்பந்து போட்டியில், பெண்களில் ரைசிங் ஸ்டார் அணி, பிசியோ கேர் அணியை தோற்கடித்தது.மேயர் ராதாகிருஷ்ணன் கூடைப்பந்து கிளப் சார்பில், 20ம் ஆண்டு மாநில கூடைப்பந்து போட்டி, எழும்பூரில் உள்ள மாநகராட்சி மைதானத்தில் நடக்கிறது.இரவில் விளையாடும் மின்னொளி ஆட்டமான இப்போட்டியில் லயோலா, இந்தியன் வங்கி, வருமான வரித்துறை, எஸ்.டி.ஏ.டி., உட்பட ஆண்களில் 38 அணிகளும், பெண்களில் 16 அணிகளும் பங்கேற்றுள்ளன.ஆண்களுக்கான போட்டியில், 'நாக்- அவுட்' மற்றும் 'லீக்' முறையிலும், பெண்களுக்கான போட்டியில், நாக் - அவுட் முறையில் மட்டும்நடக்கின்றன.பெண்களுக்கான நாக் - அவுட் போட்டியில், ரைசிங் ஸ்டார் மற்றும் பிசியோகேர் பி.சி., அணிகள் மோதின. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில், 97 - 82 என்ற கணக்கில் ரைசிங் ஸ்டார் அணி வெற்றி பெற்றது.மற்றொரு போட்டியில், எத்திராஜ் கல்லுாரி அணி, 53 - 52 என்ற கணக்கில், தமிழக போலீஸ் அணியை தோற்கடித்தது. ஆண்களுக்கான லீக் சுற்றில் இந்தியன் வங்கி அணி, 102 - 66 என்ற கணக்கில், திண்டுக்கல் பி.சி., அணியை வீழ்த்தியது. இன்று இரவு, இறுதிப் போட்டிகள் நடக்கின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை