உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / கூலி தொழிலாளிக்கு வெட்டு சிறுவன் உட்பட மூவர் கைது

கூலி தொழிலாளிக்கு வெட்டு சிறுவன் உட்பட மூவர் கைது

புதுவண்ணாரப்பேட்டை : கூலித்தொழிலாளியை வெட்டிய சிறுவன் உட்பட மூவரை, போலீசார் கைது செய்தனர்.புதுவண்ணாரப்பேட்டை, அண்ணா நகர் பிளாட்பாரத்தில் வசித்து வருபவர் சந்துரு, 40; கூலித்தொழிலாளி. இவர் நேற்று, புதுவண்ணாரப்பேட்டை, பீச் ரோடு அருகே நின்றிருந்தார்.அப்போது, அவ்வழியே 'பைக்'கில் வந்த மூவர் கும்பல், சந்துருவை கத்தியால் சரமாரியாக வெட்டி விட்டுத் தப்பியது.இதுகுறித்து புதுவண்ணாரப்பேட்டை போலீசார் கொலை முயற்சி பிரிவின் கீழ் வழக்கு பதிந்து, சம்பவத்தில் ஈடுபட்ட திருவொற்றியூர், கலைஞர் நகரைச் சேர்ந்த சுரேந்தர், 21, திருவொற்றியூர், சாஸ்திரி நகரைச் சேர்ந்த மணிகண்டன், 21, மற்றும் 17 வயது சிறுவன் உட்பட மூவரை கைது செய்தனர்.இதில் மணிகண்டன் மீது, கொலை முயற்சி வழக்கு உட்பட, நான்கு வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை