உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / வீணாகும் குடிநீர் அதிகாரிகள் மெத்தனம்

வீணாகும் குடிநீர் அதிகாரிகள் மெத்தனம்

ஆவடி : ஆவடி அடுத்த பட்டாபிராம், 20வது வார்டு தண்டரையில், வள்ளலார் நகர் பிரதான சாலை உள்ளது. இங்குள்ள வள்ளலார் நகர் 5வது தெருவில், ஆழ்துளைக் கிணறு அமைத்து, அப்பகுதியில் குடிநீர் வினியோகிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், வள்ளலார் நகர் 5வது இணைப்பு தெரு மற்றும் வள்ளலார் நகர் 7வது தெருவில், கடந்த சில மாதங்களாக குழாய் உடைந்துள்ளது. அப்பகுதி வாசிகள், நீர் கசியும் பகுதியில் துணி வைத்து அடைத்துள்ளனர். இருப்பினும், தினமும் குடிநீர் சாக்கடையில் வழிந்து வீணாகி வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ