உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / 1 கி.மீ., சுற்றி செல்லும் பயணியர் சாலைகள் இணைப்பது எப்போது?

1 கி.மீ., சுற்றி செல்லும் பயணியர் சாலைகள் இணைப்பது எப்போது?

கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி ரயில் நிலையத்தை ஒட்டி, ரயில்வே ஊழியர் குடியிருப்பு சாலை அமைந்துள்ளது. தெற்கு பகுதியில், இச்சாலை முடிவடையும் இடத்தில் இருந்து, 250 மீட்டர் தொலைவில், பழைய தபால் தெரு சாலை அமைந்துள்ளது.இடைப்பட்ட பகுதி முழுதும் ரயில்வே துறைக்கு சொந்தமான நிலம் உள்ளது. 20 ஆண்டுகளுக்கு முன் வரை, இவ்வழியாக ரயில் பயணியர் சென்று வந்தனர்.தற்போது, மாநில நெடுஞ்சாலை துறையினர் கட்டுப்பாட்டில் உள்ள பழைய தபால் தெரு சாலையில், ஏராளமான ஆக்கிரமிப்பு கடைகள் உருவாகியுள்ளன.இதனால், ரயில் நிலையம் செல்வதற்கு வழியின்றி, 1 கி.மீ., துாரம் சுற்றி செல்ல வேண்டிய நிலையில் ரயில் பயணியர் உள்ளனர். ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றி, ரயில்வே ஊழியர் குடியிருப்பு சாலையை, தபால் தெரு சாலையுடன் இணைக்க வேண்டும் என, ரயில் பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை