சென்னை:சென்னை ரயில் கோட்டம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: சென்னை கடற்கரை - ஆவடிக்கு இரவு 9:45, சென்ட்ரல் - அரக்கோணம் இரவு 10:00, சென்னை கடற்கரை - பட்டாபிராம் மிலிட்டரி சைடிங் இரவு 11:15, சென்ட்ரல் - ஆவடிக்கு இரவு 10:10, 11:30, 11:45 மணி ரயில்கள் இன்று ரத்து செய்யப்படுகிறது அரக்கோணம் - சென்ட்ரல் இரவு 9:45, திருவள்ளூர் - ஆவடி இரவு 10:10, பட்டாபிராம் மிலிட்டரி சைடிங் - சென்ட்ரல் இரவு 10:45, பட்டாபிராம் மிலிட்டரி சைடிங் - ஆவடி இரவு 11:55 மணி ரயில்கள் இன்று ரத்து செய்யப்படுகிறது ஆவடி - சென்னை கடற்கரை அதிகாலை 3:50, 4:35, சென்ட்ரல் - ஆவடி நள்ளிரவு 12:15 மணி ரயில்கள் நாளை ரத்து செய்யப்படுகிறதுஆவடி - சென்ட்ரல் அதிகாலை 4:00, ஆவடி - சென்னை கடற்கரை அதிகாலை 4:10 மணி ரயில்கள் நாளை ரத்து செய்யப்படுகிறது
ஒரு பகுதி ரத்து:
சென்ட்ரல் - திருவள்ளூர் இரவு 8:55 மணி, சென்ட்ரல் - பட்டாபிராம் மிலிட்டரி சைடிங் இரவு 9:25 மணி ரயில் இன்று ஆவடி வரை மட்டுமே இயக்கப்படும்அரக்கோணம் - சென்ட்ரல் மாலை 6:25, இரவு 7:55 மணி ரயில்கள் , பட்டாபிராம் மிலிட்டரி சைடிங் - சென்னை கடற்கரை இரவு 8:25 மணி ரயில் இன்று ஆவடி இருந்து இயக்கப்படும்சென்ட்ரல் - பட்டாபிராம் மிலிட்டரி சைடிங் அதிகாலை 4:15 மணி ரயில் நாளை ஆவடியில் இருந்து இயக்கப்படும் கடற்கரை - அரக்கோணம் அதிகாலை 4:15 மணி ரயில் நாளை ஆவடியில் இருந்து இயக்கப்படும் சென்ட்ரல் - திருவள்ளூர் அதிகாலை 4:30, 5:20 மணி ரயில்கள், நாளை ஆவடியில் இருந்து இயக்கப்படும் இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
எளாவூருக்கு நீட்டிப்பு
இஸ்லாமிய ஆன்மிக கூட்டம் எளாவூரில் நடக்க உள்ளது. இதையடுத்து, சென்னை சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி மின்சார ரயில்கள் இன்றும், நாளையும், எளாவூருக்கு நீட்டித்து இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.l சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி காலை 9:00, மாலை 3:05 மணி ரயில்கள் இன்றும், நாளையும் எளாவூர் வரை நீட்டித்து இயக்கப்படும் l கும்மிடிப்பூண்டி - சென்ட்ரல் காலை 10:45, மாலை 4;45 மணி ரயில்கள் இன்றும், நாளையும் எளாவூரில் இருந்து இயக்கப்படும் . இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.