உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / பட்டாசு வெடித்த இளைஞரின் கைவிரல்கள் துண்டானது

பட்டாசு வெடித்த இளைஞரின் கைவிரல்கள் துண்டானது

திருத்தணி:சென்னை கலைஞர்நகர் பகுதியை சேர்ந்தவர் வினோத், 20. இவர் நேற்று திருத்தணி ஒன்றியம் பட்டாபிராமபுரம் இருளர் காலனியில் உறவினர் இறப்பு நிகழ்வில் பங்கேற்றார்.மாலை இறுதி ஊர்வலத்தின் போது வினோத் பட்டாசுகளை வெடித்துக் கொண்டே சென்றுள்ளார். அப்போது, திடீரென வினோத் வலது கையில் வைத்திருந்த ஒரு பட்டாசு வெடித்தது . இதில் வினோத்தின் வலது கையில் இரண்டு விரல்கள் துண்டாகி ரத்தம் கொட்டியது.அங்கிருந்தவர்கள் அவரை திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்து முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின் சென்னை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். திருத்தணி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ