உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / மாநகர பஸ் மோதியதில் வடமாநில வாலிபர் பலி

மாநகர பஸ் மோதியதில் வடமாநில வாலிபர் பலி

எழும்பூர்::சாலையைக் கடக்கும் போது மாநகர பேருந்து மோதி, வடமாநில வாலிபர் உடல் நசுங்கி உயிரிழந்தார்.பீஹார் மாநிலம், பாரி பகுதியைச் சேர்ந்தவர் முகம்மது சதாம், 29; சென்னையில் தங்கி கூலி வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் எழும்பூர் ரயில் நிலையம் அருகே, காந்தி இர்வின் சாலையை கடக்க முயன்றார்.அந்த நேரத்தில் அங்கு வந்த, அண்ணா சதுக்கத்தில் இருந்து கோயம்பேடு செல்லும் தடம் எண் '27பி' அரசு பேருந்து, முகம்மது சதாம் மீது மோதி, அவர் மீது ஏறி இறங்கியது. இதில் அவர், உடல் நசுங்கி பலியானார்.இது குறித்த தகவலறிந்து வந்த அண்ணா சதுக்கம் போக்குவரத்து போலீசார், முகம்மது சதாம் உடலை கைப்பற்றி, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து, விபத்து ஏற்படுத்திய அரசு பேருந்து ஓட்டுனரான, செஞ்சி பகுதியைச் சேர்ந்த எழிலரசன், 41, என்பவரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ