| ADDED : பிப் 14, 2024 11:45 PM
கும்மிடிப்பூண்டி:திருவள்ளூர் மாவட்டம், சின்னம்பேடு கிராமத்தில் பிரசித்தி பெற்ற சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. செவ்வாய், ஞாயிறு, விடுமுறை மற்றும் விசேஷ நாட்களில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சிறுவாபுரி முருகனை தரிசிக்க வருவர்.பக்தர்களின் வேண்டுதல் நிறைவேற பணம், தங்கம், வெள்ளி பொருட்களை காணிக்கையாக கோவில் உண்டியல்களில் செலுத்துவது வழக்கம். கடைசியாக, 2023 செப்டம்பர் மாத இறுதியில், உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டது.அதன்பின், நான்கு மாதம் கழித்து, நேற்று கோவில் வெளி பிரகாரத்தில் உண்டியல் காணிக்கைகளை எண்ணும் பணி நடந்தது. ஹிந்து சமய அறநிலைய துறையின் சோளிங்கர் உதவி ஆணையர் ஜெயா மேற்பார்வையில், செயல் அலுவலர் கார்த்திகேயன் தலைமையில், ஊழியர்கள், பக்தர்கள் காணிக்கைகளை எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.இதில், 1 கோடியே 2 லட்சத்து 6,760 ரூபாய்; 180 கிராம் தங்கம்; 11.375 கிலோ வெள்ளி பொருட்கள் கணக்கிடப்பட்டு, வங்கியில் ஒப்படைக்கப்பட்டன.