மேலும் செய்திகள்
பாம்பு கடித்து மூதாட்டி பலி
06-Nov-2025
திருநின்றவூர்: திருநின்றவூர், கன்னடபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் லோகமணி, 45; டெலிவரி ஊழியர். இவர், கடந்த 8ம் தேதி காலை, வீட்டின் வெளியே அடுக்கி வைக்கப்பட்டிருந்த பழைய கட்டைகளை ஒழுங்குபடுத்தி வைத்தபோது, வலது காலில் நல்ல பாம்பு கடித்து மயக்கமடைந்துள்ளார். இந்நிலையில், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், நேற்று மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். திருநின்றவூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
06-Nov-2025