உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் /  முருகன் கோவிலில் குவிந்த பக்தர்கள் 3 மணி நேரம் காத்திருந்து தரிசனம்

 முருகன் கோவிலில் குவிந்த பக்தர்கள் 3 மணி நேரம் காத்திருந்து தரிசனம்

திருத்தணி: திருத்தணி முருகன் மலைக்கோவிலில், நேற்று அதிகாலை 4:00 மணிக்கு மூலவருக்கு மார்கழி மாதத்தையொட்டி, அதிகாலை 5:00 மணிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து தங்க வேல், தங்ககிரீடம் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து, சிறப்பு தீபாராதனை நடந்தது. காலை 6:00 மணி முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். நேற்று விடுமுறை என்பதால், நேற்று வழக்கத்திற்கு மாறாக திருத்தணி மலைக்கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.

Galleryஇதனால், பொது வழியில் மூலவரை தரிசனம் செய்ய மூன்று மணி நேரம் பக்தர்கள் காத்திருந்தனர். அதே போல், 100 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட் பெற்ற பக்தர்கள், இரண்டு மணி நேரம் காத்திருந்து மூலவரை தரிசித்தனர். இதுதவிர, மேல்மருவத்துார், ஆறுபடை முருகன் கோவிலுக்கு செல்லும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலைக்கோவிலில் குவிந்ததால், தேர்வீதியில் பக்தர்கள் அலை மோதியது. திருத்தணி டி.எஸ்.பி., கந்தன் தலைமையில், 30க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை