மேலும் செய்திகள்
கோவிலில் காணிக்கை, அரிசி மூட்டைகள் திருட்டு
10-Jan-2025
திருவாலங்காடு:திருவாலங்காடு ஒன்றியம், காவேரிராஜபுரம் கிராமத்தில், வினோதினி என்பவருக்கு சொந்தமான தனியார் கம்பெனிகள் மற்றும் கிடங்கு உள்ளது. இங்கு, ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அடுத்த, கைனூரைச் சேர்ந்த வீரராகவன், 59, என்பவர், வேலை செய்து வருகிறார்.இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, மர்ம நபர்கள் சிலர் கிடங்கின் ஜன்னலை உடைத்து உள்ளே இருந்த 3 லட்சத்து 50,000 ரூபாய் மதிப்பிலான விவசாய உபகரணங்கள் 15 எச்.பி., மற்றும் 10 எச்.பி., மோட்டார்கள் கத்தி இரும்பு பொருட்களை திருடிச் சென்றனர்.இதுகுறித்து வீரராகவன் அளித்த புகாரின்படி, கனகம்மாசத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து திருடர்களை தேடி வருகின்றனர்.
10-Jan-2025