உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் /  சுத்தமான குடிநீர் வழங்க முடியாத அரசு

 சுத்தமான குடிநீர் வழங்க முடியாத அரசு

திருவள்ளூர் மாவட்டம், கர்லம்பாக்கம் கிராமத்தில் குடிநீரில் கழிவுநீர் கலப்பால் 40க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்ட நிலையில், ஏழுமலை என்ற முதியவர் உயிரிழந்துள்ளார். கடந்த ஜூன் மாதம், சைதாப்பேட்டையில் பீஹார் மாநிலத்தைச் சேர்ந்த 11 வயது யுவராஜ், கழிவுநீர் கலந்த குடிநீரை குடித்ததால் உயிரிழந்த துயரத்தில், தமிழக அரசு எவ்வித படிப்பினையும் பெறாதது ஏன்? குடிநீரில் கழிவுநீர் கலக்காமலிருக்க நடவடிக்கை எடுத்திருந்தால், மீண்டும் ஒரு உயிர் போயிருக்குமா? சுத்தமான குடிநீரை கூட அரசால் வழங்க முடியவில்லை. - சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர் , நாம் தமிழர் கட்சி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ