உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / கத்தியை காட்டி மிரட்டிய மூவருக்கு சிறை

கத்தியை காட்டி மிரட்டிய மூவருக்கு சிறை

திருவள்ளூர்: போளிவாக்கம் பகுதியில் நேற்று முன்தினம் மணவாளநகர் காவல் உதவி ஆய்வாளர் கர்ணன் மற்றும் போலீசார் ரோந்து பணி மேற்கொண்டனர். சி.சி.ஐ. தனியார் தொழிற்சாலை அருகே மூன்று நபர்கள் போலீசாரைக் கண்டதும் தப்பியோட முயன்றனர். அவர்களை பிடித்து போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள் போளிவாக்கம் உதயா, 25, மணவாளநகர் சரண், 19, தலக்காஞ்சேரி சந்தானம், 27 என தெரிந்தது. இவர்கள் கத்தியை காட்டி அவ்வழியாக வருபவர்களிடம் மிரட்டி பணம் பறிக்க முயன்றது தெரிந்தது. போலீசார் மூவரையும் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ