மேலும் செய்திகள்
மயங்கி விழுந்த தொழிலாளி பலி
16-Feb-2025
ஊத்துக்கோட்டை:ஆந்திர மாநிலம், நெல்லுார் மாவட்டம், மல்லிதொட்டா பகுதியைச் சேர்ந்தவர் ஜெய்கிருஷ்ணா, 34; பாலேஸ்வரம் கிராமத்தில் தங்கி பணியாற்றி வந்த நிலையில், நேற்று முன்தினம், உறவினருடன் பேசிக் கொண்டு இருந்தார்.அப்போது கால் தவறி, மாடியில் இருந்து விழுந்தார். இதில் பலத்த காயம் அடைந்த அவர், பெரியபாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாக கூறினர். ஊத்துக்கோட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
16-Feb-2025