உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / வாகன விபத்தில் ஒருவர் படுகாயம்

வாகன விபத்தில் ஒருவர் படுகாயம்

பள்ளிப்பட்டு, மாநில நெடுஞ்சாலையில் வேகமாக வந்த சரக்கு ஆட்டோ மோதியதில், பைக்கில் சென்றவர் படுகாயமடைந்தார். ஆந்திர மாநிலம், நகரியைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன், 46. இவர், நேற்று 'ஹீரோ பேஷன் புரோ' பைக்கில், பள்ளிப்பட்டில் இருந்து வீடு நோக்கி சென்று கொண்டிருந்தார். பள்ளிப்பட்டு வட்டாட்சியர் அலுவலகம் அருகே சென்ற போது, எதிரே வந்த, 'டாடா ஏஸ்' சரக்கு ஆட்டோ மோதியது. இதில், படுகாயமடைந்த பாலகிருஷ்ணன், திருத்தணி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து, பள்ளிப்பட்டு போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை