உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / ஊராட்சி அலுவலகம் கட்டும் பணி மந்தம்

ஊராட்சி அலுவலகம் கட்டும் பணி மந்தம்

கடம்பத்துார் : கடம்பத்துார் ஒன்றியத்துக்குட்பட்டது கொண்டஞ்சேரி ஊராட்சி. இங்குள்ள ஊராட்சி மன்ற அலுவலகம் மிகவும் சேதமடைந்து பயன்படுத்தாத முடியாத நிலையில் உள்ளது. இதையடுத்து ஊராட்சி மன்ற அலுவலகம், தற்போது புதிதாக கட்டப்பட்ட கிராம சேவை மையத்தில் இயங்கி வருகிறது.இந்நிலையில், ஒன்றிய நிர்வாகம் சார்பில் தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ், 23 லட்ச ரூபாய் மதிப்பில் கிளை நுாலகம் அருகே புதிய ஊராட்சி மன்ற அலுவலகம் கட்டும் பணி கடந்த 2020ம் ஆண்டு அக்டோபரில் துவங்கி நடந்து வருகிறது.இந்த பணிகளை மூன்று மாதத்தில் நிறைவேற்ற திட்டமிட்டுள்ளதாக ஒன்றிய அதிகாரி தெரிவித்த நிலையில் தற்போது நான்காண்டுகளாகியும் பணிகள் நிறைவடையாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது இப்பகுதிவாசிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் புதிய ஊராட்சி மன்ற அலுவலகம் கட்டும் பணியை ஆய்வு செய்து விரைந்த முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென, கொண்டஞ்சேரி பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி