மேலும் செய்திகள்
சுத்தமான குடிநீர் வழங்க முடியாத அரசு
13 hour(s) ago
100 நாள் வேலைக்கு கட்டிங் :கலெக்டர் அலுவலகத்தில் மனு
14 hour(s) ago
பவானியம்மன் கோவிலில் குவிந்த பக்தர்கள்
29-Dec-2025
இன்று இனிதாக திருவள்ளூர்
29-Dec-2025
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், திருமழிசையில் அமைந்துள்ளது குளிர்ந்த நாயகி உடனுறை ஒத்தாண்டேஸ்வரர் கோவில். இங்கு வரும் 15ம் தேதி பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் துவங்குகிறது. முன்னதாக வரும் 14ம் தேதி விநாயகர் உற்சவம் நடைபெறும். பங்குனி உத்திர திருவிழாவில் தினமும் காலை, மாலையில் பல்வேறு வாகனங்களில் சுவாமி எழுந்தருளி அருள்பாலிப்பார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம், வரும் 21ம் தேதி காலை 7:30 மணிக்கு மேல் 9:00 மணிக்குள் நடைபெறும்.மாலை 5:00 மணிக்கு வசந்த மண்டபம் எழுந்தருளலும், இரவு 8:00 மணிக்கு மேல் வசந்த மண்டபத்திலிருந்து கோவிலுக்குள் எழுந்தருளலும் நடைபெறும். வரும் 24ம் தேதி காலை நடராஜர் தரிசனமும், மாலை திருக்கல்யாணமும், இரவு பஞ்சமூர்த்திகள் உற்சவமும் நடைபெறும். வரும் 29ம் தேதி பங்குனி உத்திர திருவிழா நிறைவுபெறுகிறது.
13 hour(s) ago
14 hour(s) ago
29-Dec-2025
29-Dec-2025