உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / அரக்கோணம் ரயில் நிலைய கழிப்பறை சீரமைக்க பயணியர் வலியுறுத்தல்

அரக்கோணம் ரயில் நிலைய கழிப்பறை சீரமைக்க பயணியர் வலியுறுத்தல்

திருவாலங்காடு : ராணிப்பேட்டை மாவட்டத்தில் அமைந்துள்ளது அரக்கோணம் சந்திப்பு ரயில் நிலையம். இந்த மார்க்கமாக எக்ஸ்பிரஸ், சரக்கு ரயில் மற்றும் சென்ட்ரல், பீச், வேளச்சேரி, செங்கல்பட்டு உள்ளிட்ட ரயில் நிலையங்களுக்கு 300க்கும் மேற்பட்ட புறநகர் ரயில்கள் உட்பட 500க்கும் மேற்பட்ட ரயில்கள் தினமும் இயக்கப்படுகின்றன.இதில், அரக்கோணம் சுற்றுவட்டாரத்தில் உள்ள 200க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து, ஒன்றரை லட்சம் பேர் வரை தினமும் பயணிக்கின்றனர்.இந்நிலையில், அரக்கோணம் ரயில் நிலையத்தில் ஆறாவது நடைமேடை அருகே பயணச்சீட்டு அலுவலகம் எதிரே உள்ள கழிப்பறை முறையான பராமரிப்பு இல்லாததால், கதவுகள் உடைந்து காணப்படுகின்றன. இதனால், பயணியர் கழிப்பறையை பயன்படுத்த முடியாமல் அவதியடைந்து, சிறுநீர் கழிக்க இடமின்றி தவித்து வருகின்றனர்.ஆண்கள் பலர், ரயில் நிலையத்தின் அருகே உள்ள காலி இடத்தில், திறந்தவெளியில் சிறுநீர் கழிக்கும் அவலநிலை ஏற்பட்டு உள்ளது.எனவே, இந்த கழிப்பறையை சீரமைத்து, மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என, பயணியர் வலியுறுத்தி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ