உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / மக்கள் குறைதீர் கூட்டம் 165 மனுக்கள் ஏற்பு

மக்கள் குறைதீர் கூட்டம் 165 மனுக்கள் ஏற்பு

திருவள்ளூர் : திருவள்ளூரில் நேற்று நடந்த மக்கள் குறைதீர் கூட்டத்தில் 165 மனுக்கள் ஏற்கப்பட்டன.திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர் கூட்டம் நடந்தது. கலெக்டர் பிரபுசங்கர் தலைமை வகித்து பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார்.இதில், நிலம் சம்பந்தமாக 68, சமூக பாதுகாப்பு திட்டம் 16, வேலைவாய்ப்பு வேண்டி 9, பசுமை வீடு, அடிப்படை வசதி கோரி 45, இதரதுறை 27 என, மொத்தம் 165 மனுக்கள் பெறப்பட்டன.இம்மனுக்களின் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு தகுதியுள்ள பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவி வழங்கிட துறை அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் ராஜ்குமார், பொன்னேரி சப் - கலெக்டர் வாகே சங்கத் பல்வந்த் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ