மேலும் செய்திகள்
குண்டும் குழியுமான கூடப்பாக்கம் சாலை
27-Dec-2024
கீழ்மணம்பேடு:திருமழிசை அடுத்துள்ளது பூந்தமல்லி ஒன்றியத்துக்குட்பட்டது கீழ்மணம்பேடு ஊராட்சி.இப்பகுதியில் அமைந்துள்ள திருமழிசை ஏரியில் இருந்து கடந்த 2023ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அரசு அனுமதியுடன் சவடு மணல் அள்ளும் பணி நடந்து வந்தது.இவ்வாறு ஏரியில் சவுடு மணல் அள்ளப்பட்ட லாரிகள் கீழ்மணம்பேடு ஊராட்சியில் குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள சாலை வழியே சென்று வந்தன.இந்த சவுடு மணல் லாரிகளால் சாலைகள் மிகவும் சேதமடைந்து கற்கள் பெயர்ந்து மோசமான நிலையில் உள்ளது.இதனால் இந்த சாலை வழியே பள்ளி, கல்லுாரிக்கு செல்லும் மாணவ, மாணவியர் மற்றும் பகுதிவாசிகள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர்.எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதமடைந்த கிராம சாலையை சீரமைக்க வேண்டுமென கீழ்மணம்பேடு பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
27-Dec-2024