உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / சாலையோரம் காய்கறி கழிவு வாகன ஓட்டிகள் அச்சம்

சாலையோரம் காய்கறி கழிவு வாகன ஓட்டிகள் அச்சம்

திருவாலங்காடு, சென்னை --- திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில், கனகம்மாசத்திரம் அடுத்து அமைந்துள்ளது, புதுார் கிராமம். இங்கு தனியார் மருத்துவ கல்லுாரி எதிரே சாலையோரத்தில், கோயம்பேடு மார்க்கெட்டுக்கு காய்கறி இறக்கிவிட்டு வரும் வாகனத்தில் சேகரமாகும் காய்கறி கழிவு கொட்டப்படுகிறது.இதனால், அப்பகுதி அசுத்தமாக காணப்படுவதுடன், துர்நாற்றம் வீசி வருகிறது. மேலும், அவ்வழியாக புதுார் ஏரிக்கு மேய்ச்சலுக்கு செல்லும் கால்நடைகள் காய்கறி கழிவுகளை உண்ண கூட்டமாக கூடுகின்றன.இவை, கழிவுகளை உண்ண சண்டையிடுவதால், சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.எனவே, சாலையோரத்தில் கழிவுகளை கொட்டுவதை கட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ