உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் /  திருவள்ளூரில் மின் திருட்டு ரூ.11 லட்சம் அபராதம் வசூல்

 திருவள்ளூரில் மின் திருட்டு ரூ.11 லட்சம் அபராதம் வசூல்

சென்னை: திருவள்ளூர் மாவட்டத்தில், மின் திருட்டு தொடர்பாக, மின் வாரிய அமலாக்க பிரிவு அதிகாரிகள் சமீபத்தில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, 16 நபர் மின் திருட்டில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களிடம் இருந்து இழப்பீட்டு தொகையாக, 11.41 லட்சம் ரூபாய் வசூலிக்கப்பட்டது. இதுதவிர, சம்பந்தப்பட்ட நபர்கள் குற்றத்தை ஒப்பு கொண்டு, குற்றவியல் நடவடிக்கையை தவிர்க்க முன்வந்து, அதற்கு உரிய சமரச தொகையாக கூடுதலாக, 56,000 ரூபாய் செலுத்தியுள்ளனர். மின் திருட்டில் ஈடுபடும் நபரின் தகவல்களை பொது மக்கள், மின் வாரிய அமலாக்க பிரிவு செயற்பொறியாளரிடம், 94458 57591 என்ற மொபைல் எண்ணில் தெரிவிக்கலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி