மேலும் செய்திகள்
7 விரைவு ரயில்களின் சேவையில் மாற்றம்
26-Oct-2025
சென்னை: பீஹாரில் இருந்து சென்னை பெரம்பூர் வழியாக, எர்ணாகுளம், மற்றும் எஸ்.எம்.வி.டி., பெங்களூருக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கை: பீஹார் மாநிலம் பாருணியில் இருந்து, வரும் 11, 12ம் தேதிகளில், இரவு 8:30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், அடுத்த நான்காவது நாளில், காலை 6:00 மணிக்கு கேரள மாநிலம் எர்ணாகுளம் செல்லும். இந்த ரயில், சென்னை பெரம்பூர், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர் வழியாக இயக்கப்படும் பீஹார் மாநிலம் முஜாப்பூரில் இருந்து, வரும் 11ம் தேதி இரவு 9:15 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், அடுத்த மூன்றாவது நாளில், இரவு 11:50 மணிக்கு, கர்நாடக மாநிலம் எஸ்.எம்.வி.டி., பெங்களூருக்கு செல்லும். இந்த சிறப்பு ரயில், சென்னை பெரம்பூர், காட்பாடி, ஜோலார்பேட்டை வழியாக இயக்கப்படும். மேற்கண்ட சிறப்பு ரயில்களில் முன்பதிவு துவங்கியுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
26-Oct-2025