உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / திருத்தணி வள்ளலார் கோவிலில் 25ல் தைப்பூசம்

திருத்தணி வள்ளலார் கோவிலில் 25ல் தைப்பூசம்

திருத்தணி திருத்தணி - அரக்கோணம் மாநில நெடுஞ்சாலை, திருத்தணி அரசு போக்குவரத்து பணிமனை எதிரில் வள்ளலார் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் தைப்பூசம் விழா நடந்து வருகிறது. நடப்பாண்டிற்கான தைப்பூசம் வரும், 25ம் தேதி தைப்பூசம் - அருட்பெருஞ்ஜோதி தரிசன வழிபாடு நடக்கிறது.அன்று காலை, 6:00 மணிக்கு அருட்பெருஞ்ஜோதி தீபம் ஏற்றுதல், காலை, 6:30 மணிக்கு அகல் பாராயணம், காலை, 7:30 மணிக்கு சன்மார்க்க கொடி கட்டுதல் நிகழ்ச்சி நடக்கிறது. தொடர்ந்து, காலை, 9:00 மணிக்கு திருவருட்பா பாடல்கள் இசை நிகழ்ச்சி, மதியம், 12:10 மணிக்கு, ஏழு திரைகள் அகற்றி அருட்பெருஞ்ஜோதி தரிசனம், இரவு 7:00 மணிக்கு மகாதீப ஆராதனையுடன் தைப்பூச பெருவிழா நிறைவு பெறுகிறது.ஏற்பாடுகளை நிர்வாக அறங்காவலர் பூங்காவனம் மற்றும் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ