உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / குட்கா கடத்திய மூவர் கைது

குட்கா கடத்திய மூவர் கைது

திருத்தணி:ஆந்திர மாநிலம், திருப்பதி, புத்துார் மற்றும் நகரி ஆகிய பகுதிகளில் இருந்து திருத்தணி வழியாக, ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்கள் கடத்தி செல்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.இதையடுத்து, நேற்று, திருத்தணி அடுத்த, பொன்பாடி சோதனைச்சாவடியில், திருத்தணி போலீசார் வாகன தணிக்கை நடத்தினர்.அப்போது, ஒரு தனியார் பேருந்தில், 8 கிலோ குட்கா பொருட்கள் கடத்தி வந்த ஒரு பெண் உட்பட இருவரை கைது செய்து பறிமுதல் செய்தனர்.விசாரணையில், ராணிப்பேட்டை மாவட்டம், ஐப்பேடு சாந்தி,56, அரக்கோணம் பாலாஜி, 51, என, தெரிய வந்தது.l திருவாலங்காடு ஒன்றியம், ஓரத்துார் கிராமம், பிள்ளையார் கோவில் தெருவில் பெட்டிக்கடை நடத்தி வருபவர் ராஜி 45. இவர் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை கடையில் வைத்து விற்பனை செய்வதாக திருவாலங்காடு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.அதன்படி, நேற்று காலை, கடையில் போலீசார் சோதனை செய்தனர். அப்போது, ஹான்ஸ் 2,400 கிராம், கூல்லிப் 900 கிராம், விமல் பாக்கு 250 கிராம் என, மொத்தம் 3,550 கிராம் எடையிலான குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.இதையடுத்து, பெட்டிக்கடை உரிமையாளர் ராஜி, 45, என்பவரை கைது செய்து போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ