மேலும் செய்திகள்
ரயிலில் அடிபட்டு மின்வாரிய ஊழியர் பலி
24-Nov-2024
ஆவடி:ஆவடி, காமராஜர் நகர், உடையார் தெருவைச் சேர்ந்தவர் ராஜி, 54; தச்சர். இவருக்கு மனைவி, மகன் மற்றும் இரு மகள்கள் உள்ளனர்.நேற்று காலை, ஹோட்டலில் சாப்பிட்டு வருவதாக கூறிச் சென்ற ராஜி, ஆவடி - இந்து கல்லுாரி ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளத்தை கடக்க முயன்றபோது, அரக்கோணத்தில் இருந்து சென்னை சென்ற மின்சார ரயிலில் அடிபட்டு, தலை துண்டாகி பரிதாபமாக உயிரிழந்தார்.ஆவடி ரயில்வே போலீசார் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி விசாரிக்கின்றனர்.* ஆவடி அடுத்த பட்டாபிராம், சோராஞ்சேரி, அண்ணா நகரைச் சேர்ந்தவர் அருண்குமார், 28; கூலித் தொழிலாளி. நேற்று முன்தினம், ஆவடி - இந்து கல்லுாரி ரயில் நிலையங்களுக்கு இடையே, தண்டவாளத்தை கடக்க முயன்றபோது, அரக்கோணத்தில் இருந்து சென்னை சென்ற விரைவு ரயிலில் அடிபட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.ஆவடி ரயில்வே போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி விசாரிக்கின்றனர்.
24-Nov-2024