மேலும் செய்திகள்
கடல் அலையில் சிக்கிய 3 சிறுவர்கள் உயிரிழப்பு
27-Jan-2026
கடலில் குளித்த 3 பள்ளி மாணவர்கள் பலி!
26-Jan-2026
கந்துவட்டி வசூலித்த மாஜி ராணுவ வீரர் கைது
25-Jan-2026
மகனை ஜாமினில் எடுக்க முடியாததால் தாய் தற்கொலை
22-Jan-2026
தூத்துக்குடி:தூத்துக்குடி மாவட்ட தேமுதிக.,சார்பில் இலவச கம்ப்யூட்டர் பயிற்சி மையம் திறப்பு விழா நடந்தது.தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஏழை எளிய மாணவ, மாணவியர் வாழ்வில் பயன்பெற தேமுதிக., சார்பில் இலவச கணினி பயிற்சி மையம் தூத்துக்குடி புதுக்கிராமத்திலுள்ள தேமுதிக.,அலுவலகத்தில் திறக்கப்பட்டது. இதன் திறப்பு விழாவிற்கு தெற்கு மாவட்ட செயலாளர் சண்முகராஜா தலை மை வகித்தார். கம்ப்யூட்டர் பயிற்சி மையத்தை மாநில மீனவரணி செயலாளர் பீட்டர்ராஜ் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் மாநில தொழிற்சங்க துணை செயலாளர் ஆறுமுகநயினார், மாவட்ட மாணவரணி செயலாளர் சேக்உமர், மாவட்ட மகளிரணி செயலாளர் வெண்ணிலா, மாவ ட்ட துணை செயலாளர் துளசி ஜெயபிரகாஷ், மாவட்ட தொண்டரணி செயலாளர் முருகையா பாண்டியன், மாநகர செயலாளர் பவானிமுத்துராஜ், மாநகர துணை செயலாளர் மாடசாமி, காயல்பட்டிணம் நகர செயலாளர் சதக் அப்துல்லா, ஒன்றிய செயலாளர்கள் மணிகண்டன், தசரத பாண்டியன், ராஜேந்திரன், விஸ்வபெருமாள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
27-Jan-2026
26-Jan-2026
25-Jan-2026
22-Jan-2026