| ADDED : செப் 25, 2011 12:49 AM
திருச்செந்தூர்: திருச்செந்தூர் காவல் துறையினர் மற்றும் அவர்கள் குடும்பத்திற்கான இலவச மருத்துவ முகாம் நடந்தது.இந்த முகாமை எஸ்.பி.,நரேந்திரன் நாயர் துவக்கி வைத்தார். மருத்துவ முகாமிற்கு திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம், சாத்தான்குளம் பகுதி போலீஸ் ஸ்டேஷன்களில் பணிபுரியும் காவல் துறையினர் மற்றும் அவர்கள் குடும்பத்தினர் இந்த முகாமில் கலந்து கொண்டு பயன்பெற்றனர். காவல்துறையினர் இணைந்து இந்த முகாம் நடத்தப்பட்டது. முகாமில் டாக்டர்கள் வெங்கடேஷ், சுமதி, முத்துசுவாமி, திருச்செந்தூர் டி.எஸ்.பி., ஞானசேகரன், இன்ஸ்பெக்டர்கள் இசக்கி, பிரதாபன், சிவசுப்பிரமணியன், பார்த்திபன் உட்பட்ட பலர் கலந்து கொண்டனர்.