| ADDED : ஜூலை 19, 2024 01:43 AM
துாத்துக்குடி:துாத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஹோட்டல்கள், உணவகங்கள், உணவு விற்பனை நிறுவனங்களில் அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர். விதிகளை மீறி செயல்படும் உணவு நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது.இந்நிலையில், உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் என கூறி சில இடங்களில் வியாபாரிகளிடம் சிலர் முறைகேட்டில் ஈடுபட்டு வருவதாக புகார் எழுந்துள்ளது. வியாபாரிகளை மிரட்டி பணம் பறிப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பாதிக்கப்பட்ட வியாபாரிகள் பலர் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.இதுகுறித்து, துாத்துக்குடி மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் மாரியப்பன் கூறியதாவது:உணவு பாதுகாப்பு அலுவலர் என்று கூறிக்கொண்டு ஆய்விற்கு வருபவர்கள், எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ., சின்னம் பொறித்த ஜாக்கெட் அணிந்திருப்பதை வியாபாரிகள் உறுதி செய்ய வேண்டும். அவர்களின் அடையாள அட்டையைப் பார்த்து உறுதி செய்ய வேண்டும். அடையாள அட்டை காண்பிக்காதவர்களை ஆய்விற்கு அனுமதிக்க வேண்டாம்.அவர்கள் குறித்து, உடனடியாக உணவு பாதுகாப்பு துறை அலுவலகத்திற்குத் தகவல் தெரிவிக்க வேண்டும். உணவு பாதுகாப்பு துறை பெயரில் அல்லது அலுவலர்களின் பெயரில் பணம் கேட்டால் உரிய ஆதாரத்துடன் புகார் அளிக்கலாம்.இவ்வாறு அவர் கூறினார்.