உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தூத்துக்குடி / மனைவியை வெட்டிய கணவர் உட்பட மூன்று பேர் கைது

மனைவியை வெட்டிய கணவர் உட்பட மூன்று பேர் கைது

தூத்துக்குடி:துாத்துக்குடியில் தகராறில் மனைவியை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிய கணவர் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.தூத்துக்குடி அல்லிக்குளம் பகுதியை சேர்ந்தவர் குணா 35. இவரது மனைவி அமராவதி 28. இரண்டு குழந்தைகள் உள்ளனர். குணா வேலைக்கு செல்லவில்லை. அமராவதி மகளிர் சுய உதவி குழுவில் இணைந்து பணியாற்றி வருகிறார். இதனால் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.நேற்று முன்தினம் துாத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் நடந்த பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு பேரணியில் பங்கேற்று விட்டு டூவீலரில் அமராவதி வீட்டுக்கு வந்து கொண்டு இருந்தார். கோரம்பள்ளம் அருகே அவரை வழிமறித்து கணவர் குணா சரமாரியாக அரிவாளால் வெட்டினார். கழுத்து பகுதியில் பலத்த காயமடைந்த அவர் உயிருக்கு போராடிய நிலையில் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவ்வழக்கில் குணா, அவரது தம்பி முருகன், நண்பர் வள்ளி ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ