உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பத்தூர் / ஆம்பூர் அருகே சிக்னல் கோளாறு 7 ரயில்கள் நடுவழியில் நிறுத்தம்

ஆம்பூர் அருகே சிக்னல் கோளாறு 7 ரயில்கள் நடுவழியில் நிறுத்தம்

ஜோலார்பேட்டை:திருப்பத்துார் மாவட்டம், ஆம்பூர் அருகே, நேற்று முன்தினம் இரவு, 7:35 மணிக்கு சிக்னல் கோளாறு ஏற்பட்டது. இதனால், சென்னை - பெங்களூரு சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில் மற்றும் 'அம்ரித் பாரத்' எலக்ட்ரானிக்ஸ் ரயில், பச்சக்குப்பம் ரயில்வே ஸ்டேஷனிலும், சென்னை - மங்களூரு எக்ஸ்பிரஸ் ரயில், விண்ணமங்கலம் ரயில்வே ஸ்டேஷனிலும் நிறுத்தப்பட்டன.அதுபோல, மும்பை - நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயில், ஆம்பூர் ரயில்வே ஸ்டேஷனிலும், அரக்கோணம் - ஜோலார்பேட்டை எக்ஸ்பிரஸ் ரயில், குடியாத்தம் ரயில்வே ஸ்டேஷனிலும், சென்னை - கோவை செல்லும் கோவை எக்ஸ்பிரஸ் ரயில், வாணியம்பாடி ரயில்வே ஸ்டேஷனிலும், ரப்திசாகர் எக்ஸ்பிரஸ் ரயில் ஜோலார்பேட்டை ரயில்வே ஸ்டேஷனிலும் நிறுத்தப்பட்டன.ஆம்பூர் ரயில்வே அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள், நேற்று முன்தினம் இரவு, 8:45 மணிக்கு கோளாறை சரி செய்தனர். அதன்பின், ஒரு மணி நேரத்திற்கும் மேலாக ரயில்கள் தாமதமாக புறப்பட்டன. இதனால் பயணிகள் அவதியடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ