மேலும் செய்திகள்
கிரைம் செய்திகள்...
19-Oct-2024
திருப்பத்துார்:திருப்பத்துார் அருகே, தோல் தொழிற்சாலை தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்த தொழிலாளி பலியானார்.திருப்பத்துார் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த உதயேந்திரம் புதுமனையை சேர்ந்தவர் வினோத்குமார், 50. இவர், கச்சேரி சாலையிலுள்ள தனியார் தொழிற்சாலையில் பணியாற்றி வந்தார். கடந்த, 30 ல் வழக்கம்போல் வேலைக்கு சென்றவர், மீண்டும் வீடு திரும்பவில்லை. அவரை, குடும்பத்தினர் தேடி வந்தனர். நேற்று காலை கச்சேரி சாலையில் மற்றொரு தோல் தொழிற்சாலைக்கு சொந்தமான தண்ணீர் தொட்டியில், குப்புசாமி சடலமாக கிடந்தார். வாணியம்பாடி டவுன் போலீசார், குப்புசாமி உடலை மீட்டு விசாரித்து வருகின்றனர்.
19-Oct-2024