உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / 2 விபத்துகளில் 2 பேர் பலி

2 விபத்துகளில் 2 பேர் பலி

திருப்பூர், சேலத்தை சேர்ந்தவர் நாகபிரசாத், 34; பங்குச்சந்தை தொடர்பாக 'ஆன்லைன்' வகுப்புகள் எடுத்து வந்தார். இவரது மனைவி கீதா, திருச்சி ஆவினில் கால்நடை டாக்டராக உள்ளார். நாகபிரசாத், நேற்று கோவையில் இருந்து மதுரைக்கு காரில் சென்றார். தாராபுரம் - ஒட்டன்சத்திரம் ரோட்டில் சென்றபோது, கட்டுப்பாட்டை இழந்து ரோட்டோர மையதடுப்பில் மோதியது. இதில் நாகபிரசாத் பலியானார். மூலனுார் போலீசார் விசாரிக்கின்றனர்.மற்றொரு விபத்துதிருப்பூர், ராக்கியாபாளையம் பிரிவு, ஜெய் நகரை சேர்ந்தவர் உமாசங்கர், 43. செக்யூரிட்டியாக வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் நல்லுாரிலிருந்து டூவீலரில் காசிபாளையம் ரோட்டின் வழியாக டூவீலரில் சென்றார். அவ்வழியாக வந்த சரக்கு வேன், டூவீலர் மீது மோதியது. படுகாயமடைந்த அவர் பரிதாபமாக இறந்தார். நல்லுார் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி