உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ஸ்கூட்டர் வழங்க பயனாளி தேர்வு முகாம்

ஸ்கூட்டர் வழங்க பயனாளி தேர்வு முகாம்

திருப்பூர்:திருப்பூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் சார்பில், உதவி உபகரணங்களுக்கான பயனாளிகள் தேர்வு முகாம் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்றது.மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் வசந்த்ராம்குமார் தலைமை வகித்தார். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் 60 பேர் பங்கேற்றனர். இணைப்பு சக்கரம் பொருத்திய ஸ்கூட்டர், பேட்டரி வீல் சேர், காதொலி கருவிகளுக்கான பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ