ரயிலில் பாய்ந்து வியாபாரி தற்கொலை
திருப்பூர்; திருப்பூர், கோம்பைத் தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் உசேன், 36. பனியன் வேஸ்ட் வியாபாரம் செய்து வந்தார்.திருமணமாகி, மனைவி மற்றும் மூன்று குழந்தைகள் உள்ளனர்.நேற்று முன்தினம் இரவு ஊத்துக்குளி ரோடு முதல் ரயில்வே கேட் அருகே, ரயில் முன் பாய்ந்து உசேன் தற்கொலை செய்து கொண்டார்.இதுகுறித்து திருப்பூர் ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.