உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / திருமூர்த்திமலை கோவிலுக்கு பக்தர்கள் அனுமதி; அருவிக்கு செல்ல தடை நீட்டிப்பு

திருமூர்த்திமலை கோவிலுக்கு பக்தர்கள் அனுமதி; அருவிக்கு செல்ல தடை நீட்டிப்பு

உடுமலை : உடுமலை திருமூர்த்திமலையில், கோவிலுக்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்ட நிலையில், பஞ்சலிங்கம் அருவிக்கு செல்ல அனுமதிக்கவில்லை.உடுமலை அருகேயுள்ள திருமூர்த்திமலை பகுதிகளில் நேற்று முன்தினம் கன மழை பெய்தது. மலைமேலுள்ள பஞ்சலிங்கம் அருவியில் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டியது. இதனால், சுற்றுலா பயணியர், பக்தர்கள் அருவிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது.இந்நிலையில், நேற்று முன்தினம் மதியம், அதிகன மழை காரணமாக, மலையடிவாரத்திலுள்ள, அமணலிங்கேஸ்வரர் கோவிலை, காட்டாற்று வெள்ளம் சூழ்ந்தது. பக்தர்கள் உடனடியாக பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.இரவு முழுவதும் வெள்ள நீர் சூழ்ந்த நிலையில், நேற்று அதிகாலை படிப்படியாக குறைந்தது. கோவிலை சுற்றி வரும் பகுதியில், தோணியாற்றில் மட்டும் மழை நீர் அதிகளவு சென்றது.கோவில் வளாகத்தில் வெள்ள நீர் வடிந்த நிலையில், கோவில் பணியாளர்கள் துாய்மை பணியில் ஈடுபட்டனர். காட்டாற்று வெள்ளத்தில் அடித்து வரப்பட்டு, தேங்கியிருந்த மரங்கள், இலைகள் மற்றும் மண், மணல் ஆகியவை அகற்றப்பட்டு, நீர் கொண்டு கோவில் வளாகம் துாய்மைப்படுத்தப்பட்டது.தொடர்ந்து, மும்மூர்த்திகள் மூலாலயம் மற்றும் விநாயகர், முருகன், நவக்கிரகங்கள் சன்னதிகளில் வழக்கமான பூஜைகள் செய்யப்பட்டது. பல்வேறு பகுதிகளிலிருந்து வந்திருந்த ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.இருப்பினும், மலைமேலுள்ள பஞ்சலிங்கம் அருவியில் நீர் வரத்து குறையாததால், அருவிக்கு செல்ல இரண்டாவது நாளாக நேற்றும், சுற்றுலா பயணிகள், பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. கோவில் பணியாளர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை