உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / தண்ணீர் வந்தும் பயனில்லை... கழிவுநீர் வெளியேற வழில்லை!

தண்ணீர் வந்தும் பயனில்லை... கழிவுநீர் வெளியேற வழில்லை!

நடுரோட்டில் மின் கம்பம்பல்லடம், வடுகபாளையம், எஸ்.என்.ஆர்., கார்டனில் நடுரோட்டில் மின்கம்பம் உள்ளது. இடமாற்ற மின்வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.- முருகேஷ், எஸ்.என்.ஆர்., கார்டன். (படம் உண்டு)ஆக்கிரமிப்பு அதிகம்திருப்பூர், தென்னம்பாளையம், டி.கே.டி., மில் பஸ் ஸ்டாப்பில் போக்குவரத்து இடையூறாக வாகனங்கள் நிறுத்துவதுடன், ஆக்கிரமிப்பும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஆக்கிரமிப்பு அகற்ற வேண்டும்.- சுதா, தென்னம்பாளையம். (படம் உண்டு)வீணாகும் தண்ணீர்திருப்பூர், ஜெய்வாபாய் ஸ்கூல் ரோடு, மாநகராட்சி காம்ப்ளக்ஸ் முன்குழாய் உடைந்து தண்ணீர் தொடர்ந்து வீணாகுவது வாடிக்கையாக உள்ளது. குழாய் உடைப்பை சரிசெய்ய வேண்டும்.- சத்யன், ஜெய்வாபாய் ஸ்கூல் ரோடு. (படம் உண்டு)ரோட்டோரம் எதற்கு?திருப்பூர், பல்லடம் ரோடு, வீரபாண்டி பிரிவில் சாலை அகலப்படுத்தும் பணிக்காக அகற்றப்பட்டு அறிவிப்பு பலகைகள் மீண்டும் பொருத்தப்படாமல், ரோட்டோரத்தில் அப்படியே வைக்கப்பட்டுள்ளது.- மாணிக்கம், வீரபாண்டி. (படம் உண்டு)வீணாகும் தண்ணீர்திருப்பூர், ஐந்தாவது வார்டு, எஸ்.ஆர்.வி., நகரில் குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வீணாகிறது. சாலை சேறும், சகதியுமாக மாறுகிறது. குழாய் உடைப்பை சரிசெய்ய வேண்டும்.- சந்திரன், எஸ்.ஆர்.வி., நகர். (படம் உண்டு)குழியை மூட வேண்டும்குன்னத்துார் பேரூராட்சி, 5வது வார்டு, ஈஸ்வரன் கோவில் அருகில் தரைப்பாலம் சேதமாகி, ஓட்டை விழுந்துள்ளது. வாகன ஓட்டிகள் தடுமாறி விழும் வாய்ப்புள்ளது.- முருகேசன், குன்னத்துார். (படம் உண்டு)முட்புதர் அகற்றலாமே!குன்னத்துார் குளத்துக்கு அத்திக்கடவு - அவிநாசி தண்ணீர் வரத்து துவங்கியுள்ளது. குட்டையை சுற்றிலும், கருவேல மரங்கள், முட்புதர் மண்டி இருப்பதால், தண்ணீர் வந்தும் பிரயோஜனம் இல்லை.- முருகேசன், செங்காளிபாளையம். (படம் உண்டு)பல்லாங்குழி சாலைதிருப்பூர், ஸ்ரீ விக்னேஸ்வரா நகர், 7வது வீதியில் குண்டும் குழியுமாக தார் பெயர்ந்த நிலையில், வாகன ஓட்டிகள் சென்று வர சிரமமாக உள்ளது.- சித்ரா, ஸ்ரீ விக்னேஸ்வரா நகர். (படம் உண்டு)திருப்பூர், 53வது வார்டு, வீரபாண்டி குடியிருப்பு பகுதிகளுக்கு குடிநீர் குழாய் பதிக்க குழி தோண்டப்பட்டது. பணி முடிந்து குழி மூடிய பின், பேட்ஜ்ஒர்க் மேற்கொள்ளவில்லை. அப்படியே விட்டுள்ளனர்.- செல்லத்துரை, வீரபாண்டி. (படம் உண்டு)ரோடு போடுங்க...திருப்பூர், 59வது வார்டு, தெற்கு தாசில்தார் அலுவலகத்தில் இருந்து சேரன் தொழிலாளர் காலனி, கிருஷ்ணா நகர் செல்லும் ரோடு, மண் தேங்கி, மழைநீர் தேங்குகிறது. தார் ரோடு போட வேண்டும்.- மதியழகன், சேரன் தொழிலாளி காலனி. (படம் உண்டு)அவிநாசி - தெக்கலுார் இணைப்பு, கவுசிகா நதி அருகே கட்டப்பட்டுள்ள பாலத்தில் தார் ரோடு போட வேண்டும். வாகன ஓட்டிகள் சறுக்கி விழுகின்றனர்.- தங்கராஜ், சூரிபாளையம். (படம் உண்டு)இருள் சூழந்த வீதிதிருப்பூர், வீரபாண்டியில் இருந்து கல்லாங்காடு செல்லும் ரோட்டில் கூடுதலாக தெருவிளக்குகள் அமைக்க வேண்டும். இருள்சூழ்ந்து காணப்படுகிறது. பாதசாரிகள் பயத்துடன் சென்று திரும்புகின்றனர்.- செல்வராஜ், கல்லாங்காடு. (படம் உண்டு)கால்வாய் அடைப்புதிருப்பூர், நெசவாளர் காலனி, மாரியம்மன் கோவில் வீதியில் கால்வாய் அடைப்பு ஏற்பட்டு, கழிவுநீர் வெளியேற வழியின்றி அப்படியே தேங்கியுள்ளது. சுத்தம் செய்ய வேண்டும்.- ராஜன், நெசவாளர் காலனி. (படம் உண்டு)---------------------------ரியாக் ஷன்தற்காலிக சீரமைப்புதிருப்பூர், காங்கயம் ரோடு, ராக்கியாபாளையம் பிரிவில் ரோடு குண்டும் குழியுமாக இருந்தது. 'தினமலர்' செய்திக்கு பின், தற்காலிகமாக மண் கொட்டி சீரமைத்துள்ளனர்.- வரதராஜன், ராக்கியாபாளையம். (படம் உண்டு)குழியை மூடிட்டாங்க...திருப்பூர், பூலுவபட்டி பிரிவு நால்ரோடு சந்திப்பு வளைவில் சாலை குழியாக உள்ளது குறித்து, 'தினமலர்' செய்திக்கு பின், குழியை மூடி, ரோடு போட்டுள்ளனர்.- முரளி, பூலுவபட்டி. (படம் உண்டு)


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ