உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / அகற்றிய பாலத்தை கட்ட இரு ஆண்டுகளாக இழுபறி

அகற்றிய பாலத்தை கட்ட இரு ஆண்டுகளாக இழுபறி

உடுமலை;உடுமலையில், பொள்ளாச்சி ரோட்டையும், பைபாஸ் ரோட்டையும் இணைக்கும் ரோட்டில் அகற்றப்பட்ட பாலத்தை கட்ட வேண்டும், என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.உடுமலையில், பொள்ளாச்சி ரோட்டிலிருந்து, பைபாஸ் ரோட்டிற்கு செல்லும் இணைப்பு ரோடு பிரதான வழித்தடமாக இருந்தது.பஸ் ஸ்டாண்டிலிருந்து அரசு போக்குவரத்துக்கழக பணிமனைக்கு செல்லும் பஸ்கள் மற்றும் பஸ் ஸ்டாண்டிலிருந்து பொள்ளாச்சி ரோடு வழியாக, பைபாஸ் ரோடு செல்லும் வாகனங்கள் பயன்படுத்தி வந்தன.இரு ஆண்டுக்கு முன், மழை நீர் வடிகால் துார்வாரும் பணியின் போது, இணைப்பு வழித்தடத்தில், பைபாஸ் ரோட்டில் அமைக்கப்பட்டிருந்த பாலம் அகற்றப்பட்டது.மீண்டும் பாலம் கட்டப்படாதததால், அரசு பஸ்கள் மற்றும் வாகனங்கள், நகர நெரிசலில், தாராபுரம் ரோடு சந்திப்பு சென்று திரும்ப வேண்டிய நிலை உள்ளது.எனவே, அகற்றப்பட்ட பாலத்தை உடனடியாக கட்ட, நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை