| ADDED : ஜூலை 17, 2024 01:24 AM
விவசாயிடம், 1.5 சவரன் நகை திருட்டுதிருப்பூர் மாவட்டம், முத்துார், வேலம்பாளையத்தை சேர்ந்தவர் குமரன், 35; விவசாயி. இவரது மனைவி வினோதினி, 31. இருவரும் நேற்று முன்தினம் இரவு மார்க்கெட்டுக்கு செல்ல, தங்களது தோட்டத்தில் இருந்த கத்திரிக்காய் பறித்து விட்டு, வீட்டுக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது, வினோதியின் கழுத்தில் இருந்த நகையை ஒருவர் பறிக்க முயன்றார். நகையை பிடித்து கொண்ட போது, 1.5 சவரன் நகை மட்டும் பறித்து சென்றனர். வெள்ளகோவில் போலீசார் விசாரிக்கின்றனர்.அரிசி மில் உரிமையாளர் பலிதிருப்பூர் மாவட்டம், முத்துார், காங்கயம் ரோட்டை சேர்ந்தவர் ஜெகன்பிரகதீஷ், 23; அரிசி மில் நடத்தி வந்தார். நேற்று முன்தினம் இரவு ஜெகன் பிரகதீஷ், காரில் காங்கயம் நோக்கி வந்து கொண்டிருந்தார். முத்துார் - காங்கயம் ரோட்டில் பாப்பினி பச்சாபாளையம் அருகே வந்த போது கட்டுப்பாட்டை இழந்த கார், ரோட்டோரம் இருந்த மரத்தில் மோதி விபத்து ஏற்பட்டது. பலத்த காயமடைந்த அவர் பரிதாபமாக இறந்தார். காங்கயம் போலீசார் விசாரிக்கின்றனர்.அரிசி மில் உரிமையாளர் பலிதிருப்பூர் மாவட்டம், முத்துார், காங்கயம் ரோட்டை சேர்ந்தவர் ஜெகன்பிரகதீஷ், 23; அரிசி மில் நடத்தி வந்தார். நேற்று முன்தினம் இரவு ஜெகன் பிரகதீஷ், காரில் காங்கயம் நோக்கி வந்து கொண்டிருந்தார். முத்துார் - காங்கயம் ரோட்டில் பாப்பினி பச்சாபாளையம் அருகே வந்த போது கட்டுப்பாட்டை இழந்த கார், ரோட்டோரம் இருந்த மரத்தில் மோதி விபத்து ஏற்பட்டது. பலத்த காயமடைந்த அவர் பரிதாபமாக இறந்தார். காங்கயம் போலீசார் விசாரிக்கின்றனர்.