| ADDED : ஜூலை 08, 2024 10:30 PM
பல்லடம்:பல்லடம் நகராட்சி, பச்சாபாளையத்தில் மாகாளியம்மன் கோவில் உள்ளது. இதனை ஒரு சமுயாத்தினர் நிர்வகித்து வரும் நிலையில், அறநிலையத்துறைக்கு சொந்தமானது என்று சென்னை ஐகோர்ட்டில் வழக்கு விசாரணை நடந்து வருகிறது.இதற்கிடையே, நேற்று இரவு அறநிலையத்துறை சார்பில், ஹிந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான கோவில் என, அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது. இதற்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், அகற்றப்பட்டது.அப்பகுதியினர் கூறுகையில், 'பல ஆண்டுகளாக கோவிலை நாங்கள் நிர்வகித்து வருகிறோம். சமீபத்தில் தான், பல லட்சம் ரூபாய் செலவு செய்து கோவில் புதுப்பிக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. கோவில் தொடர்பான வழக்கு விசாரணை சென்னை ஐகோர்ட்டில் நிலுவையில் உள்ளது. திடீரென்று இன்று (நேற்று) அறநிலையத்துறை அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது. வழக்கு விசாரணை நடந்து வரும் சூழலில் அதிகாரிகளை எப்படி இவ்வாறு செய்யலாம்,' என்றனர்.