உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரிக்கை

ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரிக்கை

உடுமலை;உடுமலை ராஜேந்திரா ரோட்டில் காணப்படும் ஆக்கிரமிப்புகளால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு நெரிசல் ஏற்படுகிறது.உடுமலை நகரின் முக்கிய வீதிகளில் ஒன்று ராஜேந்திரா ரோடு. இந்த ரோட்டில், நகராட்சி சந்தை, அரசு மேல்நிலைப்பள்ளி, வணிக வளாகங்கள், ரயில்வே ஸ்டேஷன் அமைந்துள்ளன.போக்குவரத்து அதிகம் காணப்படும் இந்த ரோட்டில், தள்ளு வண்டிகள், கடைகளின் ஆக்கிரமிப்புகளால், நாள் தோறும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே, இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற நகராட்சியினரும், போலீசாரும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்