உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மாநகராட்சி பள்ளியில் முப்பெரும் விழா

மாநகராட்சி பள்ளியில் முப்பெரும் விழா

திருப்பூர்:திருப்பூர், வாவிபாளையம், மாநகராட்சி உயர்நிலைப்பள்ளியில் பள்ளி ஆண்டு விழா, காமராஜர் பிறந்த நாள் விழா, மாணவ, மாணவியருக்கு பாராட்டு விழா ஆகிய முப்பெரும் விழா கொண்டாடப்பட்டது.பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் பள்ளி அளவில் முதல் நான்கு இடம் பெற்ற, மித்ரா, சுதர்சன், கோகுல்ராஜ், பூஜா, ஆகியோருக்கு ரொக்கபரிசு வழங்கப்பட்டது. ஆறு முதல் பத்தாம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவியருக்கு நடனம், பேச்சு, கட்டுரை, யோகா, சிலம்பம், பரதம், நாடகம் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டது. தொடர்ந்து கலைநிகழ்ச்சிகள் நடந்தது. இன்ஸ்பெக்டர் முத்துக்குமார், சிபிபிஎஸ்., கிரியேஷன்ஸ் தீபக்குமார், அஸ்வதி கார்மெண்ட்ஸ் நித்தின், பி.டி.ஏ., தலைவர் கோவிந்தராஜ் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ