உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / தலைமை ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா எப்போது?

தலைமை ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா எப்போது?

உடுமலை;பிளஸ் 2 பொதுத்தேர்வில் மாநிலத்தில் முதலிடம் பெற்று, மூன்றாவது முறையாக திருப்பூர் மாவட்டம் முதலிடம் பெற உதவிய தலைமை ஆசிரியர்களுக்கு, எப்போது பாராட்டு விழா என்ற எதிர்பார்ப்பு கல்வித்துறை வட்டாரத்தில் எழுந்துள்ளது.பிளஸ் 2 தேர்வு முடிவில், 97.45 சதவீத தேர்ச்சியுடன், மாநிலத்தில் முதலிடம் பெற்ற திருப்பூர் மாவட்டம் அசத்தியது. இது தலைமை ஆசிரியர், ஆசிரிய, ஆசிரியைகளின் உழைப்புக்கு பெரும்பலன் கிடைத்ததாக கலெக்டர் கிறிஸ்துராஜ் பாராட்டினார்.அத்துடன், 'நம் மாவட்டம் முதலிடம் பெற உதவிய தலைமை ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா நடத்தப்படும்,' எனவும் அறிவித்தார்.கோடை விடுமுறை முடிந்து, ஜூன், 10ல் பள்ளிகள் திறக்கப்பட்டது. பள்ளிகள் திறக்கப்பட்டு ஒன்றரை மாதமாகிய நிலையில், 100 சதவீதம் தேர்ச்சி பெற உதவிய பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா குறித்து, எந்த தகவலும் இல்லை.மாவட்ட கல்வித்துறை அதிகாரிகளோ, மாவட்ட நிர்வாகம் தான் முடிவெடுக்க வேண்டும் என கையை பிசைகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ