ஓரிட சேவை மையத்துக்கு 139 ஊழியர்கள் தேர்வு
திருப்பூர்: மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு அனைத்து வகை சேவையும் ஒரே இடத்தில் வழங்கும் 26 ஓரிட சேவை மையங்கள் அமைக்கப்படுகிறது. காலியிடத்துக்கான நேர்முக தேர்வு கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. பிசியோதெரபிஸ்ட், சிறப்பு கல்வியாளர், ஆலோசகர் உள்ளிட்ட ஆறு வகையான பணிகளுக்கு 110 பெண்கள், 29 ஆண்கள் என 139 பேர் தேர்வாகினர். தேர்வு செய்யப்பட்டவர்கள், கவுமாரம் பிரசாந்தி அகாடமி ஊழியர்களாக பணியமர்த்தப்படுவர்.