பொது இடங்களில் புகை 69 பேருக்கு அபராதம்
திருப்பூர்: திருப்பூர் நகரப் பகுதியில் பொது இடங்களில் புகை பிடித்தவர்களுக்கு போலீசார் அபரதம் விதித்தனர்.திருப்பூர் மாநகர போலீசார் நேற்று பல்வேறு பகுதிகளில், பொது இடங்களில் புகை பிடித்த நபர்களைப் பிடித்து அபராதம் விதித்தனர். அவ்வகையில், நேற்று கொங்கு நகர், கே.வி.ஆர்., நகர் மற்றும் நல்லுார் சரக பகுதியில் 69 பேர் பிடிபட்டனர். அவர்களிடம் 6,900 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டது.