உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / தொழிலாளி மீது தாக்குதல்; போதை ஆசாமிகள் கைது

தொழிலாளி மீது தாக்குதல்; போதை ஆசாமிகள் கைது

பல்லடம்: பல்லடம் ஒன்றியம், தெற்குப்பாளையத்தை சேர்ந்தவர் சந்தோஷ், 26. கூலி தொழிலாளி. நேற்று முன்தினம், இவரது வீட்டுக்கு அருகே, இருவர் திறந்தவெளியில் மது அருந்திக் கொண்டிருந்தனர். இதுகுறித்து சந்தோஷ், அவர்களிடம் கேட்டுள்ளார். மது போதையில் ஆத்திரம் அடைந்த இருவரும், அருகில் இருந்த தென்னை மட்டையால், சந்தோஷை தாக்கினர். காயமடைந்த சந்தோஷ், அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து பழனிசாமி அளித்த புகாரின் பேரில், திருச்சியை சேர்ந்த சந்தோஷ்குமார், 25; கரூரை சேர்ந்த ரிஷிகேஷ்வர், 25 ஆகிய இருவரையும், பல்லடம் போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை