உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / வட்டமலை கரை அணையில் இன்று தீபங்கள் ஜொலிக்கும்

வட்டமலை கரை அணையில் இன்று தீபங்கள் ஜொலிக்கும்

திருப்பூர்: வெள்ளகோவில் அருகே உத்தமபாளையத்தில் வட்டமலை கரை ஓடை அணை உள்ளது. அணை, 650 ஏக்கர் பரப்பளவில், 27 அடி உயரத்தில் பரம்பிக்குளம் ஆழியாறு பாசன விஸ்தரிப்பு திட்டத்தின் கீழ் அமைந்துள்ளது. இதன் மூலம் உத்தமபாளையம் சுற்றியுள்ள 30 கிராமங்களில் ஆறாயிரம் ஏக்கர் விவசாய நிலம் பாசனம்பெறும் வகையில் கட்டப்பட்டுள்ளது.கடந்த 1980ல் கட்டப்பட்ட இந்த அணையில், 25 ஆண்டுகள் கடந்து, கடந்த 2021ல், அமைச்சர் சாமிநாதன் முயற்சியால், தண்ணீர் திறந்து விடப்பட்டது. விவசாயிகளுக்கு மகிழ்ச்சி ஏற்பட்டது.நீர்வரத்து காரணமாக 5 ஆண்டுகளில் ஒரு லட்சம் மரக்கன்றுகள் நட முடிவு செய்யப்பட்டு ஆண்டுதோறும் 20,000 மரக்கன்று நடப்பட்டு வருகிறது. கடந்த 5 ஆண்டுகளாக கார்த்திகை தீபத்தை முன்னிட்டு அணைப்பகுதியில், அகல் விளக்கு ஏற்றி வழிபாடு நடத்தப்படுகிறது. ஆறாவது ஆண்டாக இன்று (15ம் தேதி) மாலை 3:30 மணிக்கு, வட்டமலை கரை ஓடை நீர் வழிந்தோடும் பகுதியில் 10,008 அகல் விளக்குகள் ஏற்றப்படவுள்ளது. விவசாயிகள், பொதுமக்கள், இயற்கை மற்றும் தன்னார்வ அமைப்பினர் இதில் கலந்துகொள்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை