உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / தீபாவளி சீட்டு பலே மோசடி; ரூ.1 கோடி சுருட்டியவர் கைது

தீபாவளி சீட்டு பலே மோசடி; ரூ.1 கோடி சுருட்டியவர் கைது

திருப்பூர் : திருப்பூர், ஊத்துக்குளிரோடு, மண்ணரை, சத்யா காலனியை சேர்ந்தவர் செந்தில்குமார், 45. கருமாரம்பாளையத்தில் 'ஸ்ரீ பரமேஸ்வரா குரூப்ஸ்' என்ற பெயரில் சீட்டு நிறுவனம் நடத்தி வந்தார். தீபாவளி சிறுசேமிப்பு திட்டம் என்ற பெயரில், வாராந்திர சீட்டு, ஏலச்சீட்டு, பலகார சீட்டு பல வகையில் நடத்தப்பட்டது. அப்பகுதி மக்கள், சீட்டில் சேர்ந்து வாரம் மற்றும் மாதம்தோறும் பணம் செலுத்தி வந்தனர்.தீபாவளி சீட்டு முதிர்வடைந்த நிலையில், பணம் செலுத்தியவர்களுக்கு முதிர்வுத்தொகையை திருப்பித்தரவில்லை. செந்தில்குமார் தலைமறைவானார். ஏமாந்தவர்கள், கடந்த வாரம் ஊத்துக்குளி ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனர். திருப்பூர் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். விசாரணையில், நுாற்றுக்கும் மேற்பட்டோரிடம் ஒரு கோடிக்கு மேல் வசூல் செய்து ஏமாற்றியது தெரிந்தது. திருப்பூர் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிந்து, செந்தில்குமாரை கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மோசடியில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா என்று விசாரணை நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ